தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து இளைஞர் செய்த பயங்கரம்! - விசாரணையில் பகீர் பின்னணி - சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x
  • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, மூதாட்டியை தாக்கி 22 சவரன் நகைகளை பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
  • ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான அங்கமுத்து என்பவரது வீட்டிற்கு பனைமரம் குத்தகை கேட்டு வந்த இளைஞர், அவரது மனைவி செல்லம்மாளை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்துள்ளார்.
  • அங்கமுத்து வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது செல்லம்மாள் காது அறுபட்ட நிலையில், தலையில் காயத்துடன் இருந்துள்ளார்.
  • இளைஞர், தன்னை தாக்கிவிட்டு நகைகளை பறித்ததாக செல்லம்மாள் கூறினார்.
  • இதுதொடர்பாக கல்பகனூர் பகுதியைச் சேர்ந்த கண்ணனை போலீசார் கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.
  • ஆன்லைனில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் கடனை அடைக்க திருட்டில் ஈடுபட்டதாக அந்த இளைஞர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்