முக்கோண காதலாக மாறிய கள்ள காதல் - ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநர் செய்த கொடூரம்

x
  • சேலம் அருகே தன்னுடன் வாழ்ந்துவந்த பெண் மற்றொரு ஆணுடன் பழகியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூரம் நடந்தேறியுள்ளது.
  • தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். ஆட்டோ ஓட்டுநரான இவர், திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில், ஷெகனாஷ் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, தனி வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.
  • இந்நிலையில், அந்த பெண்ணுக்கும் மற்றொரு ஆணுக்கும் தொடர்பு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், பெண்ணின் கழுத்தை துண்டால் இறுக்கியதில், அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
  • இதனிடையே, மாதேஸ்வரன் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்