தட்டிக்கேட்டவர்கள் மீது வேண்டுமென்றே காரை ஏற்றி கொல்ல முயன்ற ஐயப்ப பக்தர்கள் - பதறவைக்கும் காட்சிகள்

x

கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது வீட்டின் அருகே பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த உணவகத்திற்கு வரும் நபர்கள் வெங்கடாசலம் வீட்டின் முன்பு காரை நிறுத்தி செல்வதால் வெங்கடாசலம் வீட்டிற்கு சென்று வர சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த உணவகத்திற்கு காரில் வந்த ஐப்ப பக்தர்கள் 6பேர் வெங்கடாடலம் வீட்டின் முன்பு காரை நிறுத்தி உள்ளனர். அப்போது காரை வீட்டின் முன்பு நிறுத்த வேண்டாம் என வெங்கடாசலம் கூறவும் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதில் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதனால் காரில் வந்தவர்கள் ஆத்திரமடைந்து அங்கிருந்தவர்கள் மீது காரை ஏற்றி கொள்ள முயன்று அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காரின் சக்கரத்தில் சிக்கி கொண்ட வெங்கடாசலத்தின் கை, காள்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில் அணை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்