சபரிமலை வாகனம் விபத்து.. உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு..

x

தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு சென்று வந்த வாகனம் விபத்துக்குள்ளான செய்தி அறிந்த‌தும், உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியசாமியை சம்பவ இடத்திற்கு சென்று உரிய உதவிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.


விபத்தில், உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கும் இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களது குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


மேலும், காயமடைந்த 2 பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்