என்னடா இது இதுக்கும் கூடுதல் கட்டணமா!.. கழிப்பறையை பயன்படுத்த ரூ.5-க்குப் பதில் ரூ.10

x

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலய வளாகத்தில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனிபகவான் சன்னதியில் உள்ள நளன் தீர்த்த குளத்தில் நீராடுவதற்கு சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் கோயில் வளாகத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றை ஏலம் எடுத்திருக்கும் மகளிர் சுய உதவி குழு பெண்கள், ஐந்து ரூபாய்க்கு பதிலாக பத்து ரூபாய் வசூல் செய்தாக புகார் எழுந்தது. இதுகுறித்து பக்தர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதுடன், இனிமேல் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்