"புதிதாக 7 கோயில்களில் ரோப் கார் வசதி" - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்

x

தமிழகத்தில் புதிதாக 7 கோயில்களில் ரோப் கார் வசதி விரைவில் அமைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலலித்த அவர், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய இரண்டு கோயில்களில் ரோப் கார் அமைக்கும் பணிகாக விரைவில் டெண்டர் கோரப்படும் என தெரிவித்தார். மேலும் பழனி, இடும்பன் மலை, கோவை அனுவாவி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட 7 கோவில்களுக்கு ரோப் கார் அமைக்கப்படவுள்ளதாகவும் சேகர்பாபு கூறினார்


Next Story

மேலும் செய்திகள்