சண்டைக்கு தயாராகும் சேவல்கள்..! அனுமதி வழங்குமா அரசு..? ஏக்கத்தில் சேவல் வளர்ப்போர்

x

கரூரில் பொங்கல் பண்டிகையின்போது சேவல் கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று சேவல் சண்டை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேவல் சண்டைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ள நிலையில், இந்த கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். சேவல் சண்டை நடத்துவதன் மூலமாக பாரம்பரிய நாட்டு சேவல்கள் மற்றும் கோழியினங்கள் பாதுகாக்கப்படும் என்றும், மக்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்துவதற்கு தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்