மர்மமான முறையில் உயிரிழந்த சேவல்கள் - அதிர்ச்சி சம்பவம்

x

குடியாத்தம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 20 க்கும் மேற்பட்ட சேவல்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன. வேலூர் மாவட்டம் குடியாத்தம், லிங்குன்றம் பகுதியில் சின்னபொண்ணு என்பவர் 20 க்கும் மேற்பட்ட நாட்டு சேவல் மற்றும் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.

இதனிடைய நேற்று மாலை அதே பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கோழிகள் மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. இதில் 3 சேவல்கள் மட்டுமே உயிரோடு வந்த நிலையில், மற்ற சேவல்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்ன பொண்ணு, குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்