தனியார் பேருந்து மோதி ஓய்வு பெற்ற ஓட்டுனர் பலி - போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

x

விழுப்புரத்தில் சாலை விபத்தில் ஓய்வு பெற்ற ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, அதிவேகமாக பேருந்துகளை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் தனியார் பேருந்து மோதி, ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் தட்சிணாமூர்த்தி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட எஸ்.பி தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அதிவேகமாக பேருந்தை இயக்கிய 10 தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்