"ரமணா" திரைப்பட பாணியில் சம்பவம்... உயிரிழந்ததாக அறிவித்த நபருக்கு மேல்சிகிச்சை? - காரைக்காலில் பரபரப்பு

"ரமணா" திரைப்பட பாணியில் சம்பவம்... உயிரிழந்ததாக அறிவித்த நபருக்கு மேல்சிகிச்சை? - காரைக்காலில் பரபரப்பு
Published on

மயிலாடுதுறை மாவட்டம் வளத்தான்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி ராஜேந்திரனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு ராஜேந்திரன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென ராஜேந்திரனுக்கு நாடித்துடிப்பு இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு, இரண்டு நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலையும் கூறாமல் மருத்துவர்கள் அலைக்கழித்து வருவதாக உறவினர்கள் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com