குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் - அதிகாரிகளோடு சிபிசிஐடி எஸ்பி ஆலோசனை

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் - அதிகாரிகளோடு சிபிசிஐடி எஸ்பி ஆலோசனை
x

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில்

ஏற்கனவே திருச்சி சி பி சி ஐ டி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 35 பேர் கொண்ட 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர் நேற்று வரை 40 நபர்களிடம் விசாரணை செய்து வந்த நிலையில் இன்று சிபிசிஐடி எஸ்.பி. தில்லை நடராஜன் புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்

இந்த நிலையில் இறையூர் கிராமத்தில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்






Next Story

மேலும் செய்திகள்