"ஒரு மாதத்தில் பட்டா வழங்க நடவடிக்கை" - கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. உறுதி

x

மேதினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி , அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை சரி செய்ய கோரி மனுக்கள அளித்தனர் . பலர் வீடுமனை பட்டா கேட்டு மனுக்கள் அளித்ததால் ஒரு மாத காலத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்