பூந்தமல்லியில் இரவோடு இரவாக போடப்பட்ட சாலை...காலையில் பெயர்ந்து வந்த பரிதாபம்

x
  • பூந்தமல்லியில் சரியாக தார் கலக்காமல், இரவு நேரத்தில் போடப்பட்ட சாலை, காலையில் பெயர்ந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
  • பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்டது லட்சுமிபுரம் பிரதான சாலை. இது, மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக இருந்து வருகிறது.
  • கடந்த 9 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் சிதிலமடைந்து காணப்பட்டது.
  • இதனை சீரமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • இந்நிலையில், நேற்று இரவு இந்த சாலை முறையாக தார் கலக்காமல் வெறும் ஜல்லிக் கற்களைக் கொண்டு போடப்பட்டது.
  • இதனால், இன்று காலையிலேயே சாலை பெயர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
  • இதையடுத்து, முறையாக சாலை அமைத்து தர அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்