பொன்னியின் செல்வன் 2- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தை இணையதளங்களில் வெளியிட தனியார் இணையத்தள சேவை நிறுவனங்களுக்கு தடை விதிக்க கோரி, லைகா புரடெக்‌ஷன்ஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அதிக பொருட்செலவில் படம் தயாரித்து வெளியிட்டு உள்ளதால், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும் என, வாதிடப்பட்டது. இதையடுத்து, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்