போலீசுடன் பாமக பிரமுகருக்கு கள்ளக்காதல் - எச்சரிக்கையை மீறியதால் வெட்டி கொலை

x

செங்கல்பட்டு அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பெண் காவலரின் தம்பி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த தர்காஸ் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். பாமக நிர்வாகியான இவர் கொண்டமங்கலம் பகுதியில் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அனுமந்தபுரத்தை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர். விசாரணையில், பெண் காவலர் சங்கீதாவுடன் மனோகரனுக்கு கள்ளத் தொடர்பு இருந்த‌தும், இதை கைவிடுமாறு சங்கீதாவின் தம்பி அஜித்குமார் பலமுறை வலியுறுத்தியதும் தெரிய வந்த‌து. மனோகரன் கேட்காத‌தால், கஞ்சா விற்பனை செய்த‌தை காட்டிக் கொடுத்த‌தற்காக கோபத்தில் இருந்த அருண் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்