இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி தந்த வீரர்கள்..மனசாட்சியே இல்லாமல் இழுத்து செல்லும் போலீஸ்

x

பாலியல் புகாரில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக, மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதிய நாடாளுமன்றம் முன்பாக 'மக்களிடம் நியாயம் கேட்பு கூட்டம்' நடத்த உள்ளதாக கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களுடன், வீர‌ர்களின் குடும்பத்தாரும் செல்ல முயன்றபோது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், வீர‌ர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் மாலையில் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என்றும் டெல்லி காவல் ஆணையருக்கு, டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்