"மீனவர்களுக்கு கியூ.ஆர். கோடுடன் பிளாஸ்டிக் ஆதார்.." - "மத்திய அரசு விரைவில் ஏற்பாடு.."

x

மீனவர்களின் பாதுகாப்புக்கென, க்யூஆர் கோடுடன் பிரத்யேக பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்காக அமல்படுத்தப்படும் நல்வாழ்வுத் திட்டங்கள் குறித்து தி.மு.க எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா பதிலளித்தார். கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதுடன், க்யூஆர் கோடுடன் கூடிய பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

கடலோரப் பாதுகாப்புப் படையினரிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் இந்த பிரத்யேக அடையாள அட்டைகள் பயன்படுவதாக அமைச்சர் ரூபாலா குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்