"வேற பொண்ணோட இருக்க போட்டோஸ்.. குழந்தைகளை பாக்க விடாம செருப்பால அடிக்கிறாங்க.." - கதறும் பெண் வழக்கறிஞர்

x

சென்னையில் கணவரை பிரிந்து வாழும் வழக்கறிஞர் ஒருவர், தனது குழந்தைகளை பார்ப்பதற்காக கணவர் வீட்டிற்கு சென்றபோது உறவினர்களால் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடசென்னை நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் ரூபினி. வழக்கறிஞரான இவருக்கும், வசந்தகுமார் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், திடீரென இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவரது வீட்டில் வசித்து வரும் தனது குழந்தைகளை முறையான நீதிமன்ற உத்தரவுடன் பார்க்க சென்றபோது, கணவரின் வீட்டார் தன்னை தாக்கி அவமானப்படுத்தியதாகவும், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் ரூபினி குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்