ஆத்திரத்தில் 'குடி' மகன் செய்த வெறிச்செயல்..!டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு - சென்னையில் அதிர்ச்சி

x
  • சென்னை வளசரவாக்கத்தில், 100 ரூபாய்க்கு மதுபாட்டில் தராததால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர், டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • வளசரவாக்கம் ஜெய் கார்டன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற கதிரவன் என்பவர், 100 ரூபாய்க்கு மதுபாட்டில் கேட்டதாக தெரிகிறது.
  • கடை ஊழியர் பாண்டுரங்கன் என்பவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கதிரவன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.
  • இதில், டாஸ்மாக் கடையின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
  • இதனிடையே, கதிரவனை பிடித்த டாஸ்மாக் கடை ஊழியர்கள், வளசரவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
  • இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கதிரவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்