ஒரே நேரத்தில் கூட்டமாக சென்ற மக்கள்..திடீரென சரிந்து விழுந்த மேம்பாலம்..80 பேருக்கு நேர்ந்த கதி..ஜம்முவில் நடந்த சோகம்

x

ஜம்மு - காஷ்மீர் உதம்பூர் அருகே, பைசாக்கி கொண்டாட்டத்தின் போது, நடை மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது. பைன் கிராமத்தில் உள்ள பெனி சங்கம் என்ற இடத்தில், பைசாக்கி விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, ஒரே நேரத்தில் ஏராளமானோர் நடை மேம்பாலத்தின் மீது ஏறியதால், எதிர்பாராத விதமாக நடை மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்