நோயாளிகள் அனுமதி சீட்டு பெற ரூ.100 லஞ்சம்... அம்பை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் - பணம் வாங்கும் பரபரப்பு வீடியோ

x

நெல்லை மாவட்டம் அம்பை அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

அவ்வாறு சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் அனுமதி சீட்டுக்கு 100 ரூபாய் லஞ்சம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க 100 ரூபாய் இல்லை என கூறி பெண் ஊழியர் அவரை திருப்பி அனுப்பியதாக புகார் எழுந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது இனிமேல் பணம் வாங்க மாட்டேன், மன்னித்து விடுங்கள் என அந்த பெண் ஊழியர் தெரிவிக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்