முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மீது பாகிஸ்தான் வீரர் திடீர் கருத்து... - “ஆம் அவர்களை வெறுப்பேற்றியுள்ளேன்...“

x

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அசாருதீனை வெறுப்பேற்றும் விதமாக ஒரு போதும் பாகிஸ்தான் அணியினர் நடந்து கொண்டதில்லை என அந்த அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது யுடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். மேலும் போட்டியின் போது, எதிர் அணி ஆட்டக்காரர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் அவர்களை வெறுப்பேற்றும்படி பாகிஸ்தான் அணி தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ள அவர், சச்சின், நவோஜித் சித்து, அஜய் ஜடேஜா, வினோத் காம்ப்ளி உள்ளிட்டோரை தான் வெறுப்பேற்றும் விதமாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். எனினும், அசாருதீன் மீது பாகிஸ்தான் அணியினர் மிகுந்த மரியாதை கொண்டிருந்ததாகவும், ஒரு போது அசாருதீனை அவமதிக்கும் வகையில் தாங்கள் நடந்து கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்