''3 அணிகளுக்கும் பாகிஸ்தான் அச்சுறுத்தலாக அமையும்" - பாகிஸ்தான் அணி ஆலோசகர் மேத்யூ ஹைடன் எச்சரிக்கை..

x

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன், வீரர்களுடன் பேசும் வீடியோவை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

அதில் பேசியுள்ள ஹைடன், முதலிரண்டு போட்டிகளில் தோற்றவுடன் பாகிஸ்தானை வெளியேற்றி விடலாம் என நினைத்தவர்களால் தற்போது தோற்கடிக்க முடியாது என தெரிவித்தார்.

மேலும் அரையிறுதியில் உள்ள 3 அணிகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தலாக இருக்கும் எனவும், இந்த மாதிரியான நிலையில் பாகிஸ்தானை எதிர்கொள்ள எந்த அணியும் விரும்ப மாட்டார்கள் எனவும் ஹைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்