தலைகுப்பற கவிழ்ந்த படகு - அடியில் சிக்கிய மீனவர்கள்..? - பரபரப்பு காட்சிகள்

x

திருவனந்தபுரம் அருகே மீன்பிடி படகு தலைகுப்பற கவிழ்ந்து விபத்தில் மூன்று மீனவர்கள் காயம் அடைந்தனர். கேரளா மாநிலம் திருவனந்துபுரத்திலுள்ள கரிங்குளம் மரியநாடு கடல் பகுதியில் மீன் பிடிக்க 8 மீனவர்களுடன் சென்ற படகு அலையில் சிக்கி தலைகுப்பிற கவிழ்ந்தது. இதில் மூன்று மீனவர்கள் படகுக்கு அடியில் சிக்கி காயமடைந்தனர். இந்த சம்பவம் கரை அருகில் நடந்ததால் அருகில் இருந்த மீனவர்கள் உடனடியாக சென்று படகை தூக்கி மீனவர்களை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்