காரைக்குடியில் 534 பேருக்கு ஆணை - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பணி நியமனங்கள்

x

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் கடந்த மாதம் நடந்த நில அளவை தேர்வில் 742 மாணவர்கள் தேர்ச்சி பெற்றது தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த மாதம் 19 ஆம் தேதி வெளி வந்த இளநிலை பொறியாளர்களுக்கான தேர்வில் மொத்தம் உள்ள 701 பணியிடங்களுக்கு காரைக்குடி தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற 534 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி நியமன ஆணையைப் பெற்றுள்ளனர். இதனால் காரைக்குடி தனியார் பயிற்சி மையத்தில் ஏதோ தவறு நடைபெறுவதாக சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்