"எங்களை மன்னித்து விடுங்கள்" | ஓ.பி.எஸ்சிடம் மன்னிப்பு கேட்ட அதிமுக மகளிரணி

x

டெல்லி சென்றிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சனிக்கிழமை மாலை சென்னை திரும்பினார்.

2 நாள் பயணமாக கடந்த 23-ம் தேதி இரவு, அவர் டெல்லி சென்றிருந்தார். பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில், அவர் பங்கேற்றார். இதையடுத்து சென்னை திருப்பினார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு, விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, மகிழ்ச்சி என கூறினார். பின்னர் காரில் ஏறிய ஒ.பன்னீர்செல்வத்திடம், எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்ற மகளிரணியை சேர்ந்த பெண்கள், தங்களை மன்னித்து விடுங்கள் என கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்