கண்ணீர் மல்க உதவிகோரிய மூதாட்டி..பணம் கொடுத்து நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு

x

தூத்துக்குடி அருகே நூறு நா ள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபட்ட பெண்களை, திமுக எம்.பி.கனிமொழி சந்தித்து பேசினார். அப்போது லட்சுமி என்ற மூதாட்டி, கனிமொழியின் கையை பிடித்துக் கொண்டு, தனது மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், தான் மிகுந்த வறுமையில் இருப்பதாகவும் கண்ணீர் மல்க செய்கை மூலம் தெரிவித்தார். அவருக்கு ஆறுதல் கூறி பணம் கொடுத்து உதவிய எம்.பி.கனிமொழி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூதாட்டியின் மகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்