ஊருக்கே கறி விருந்து - கொள்ளுப் பேரன் பேத்தியுடன் 100வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய முதியவர்

x

திருத்தணி அருகே முதியவரின் 100-வது பிறந்தநாளை, கேக் கெட்டி, கிராம மக்களுக்கு அசைவ உணவு பரிமாறி குடும்பத்தினர் கொண்டாடினர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை சேர்ந்தவர் நல்லான் விநாயகன். நெசவு தொழிலாளியான இவரின் 100-வது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாட குடும்பத்தினர் முடிவு எடுத்தனர். இதன்படி 5 மகன்கள், ஒரு மகள், 16 பேரக்குழந்தைகள், 15 கொல்லு பேரக்குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் வீட்டில் ஒன்று கூடி கேக் வெட்டி, கிராம மக்களுக்கு அசைவ உணவுகள் பரிமாறி பிறந்தநாளை கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்