"நான் யாருனு தெரியுமாடா உனக்கு".. கேட்டு கேட்டு இளைஞரை மிருகம் போல் அடித்த முதியவர் - பரபரப்பு காட்சிகள்

x

வேலூர் அரசு டாஸ்மாக் கட ையில் மது அருந்த வந்த முதியவரிடம் 10 ஆயிரம் ரூபாய் திருடியதாக, இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படும் பரபரப்பான வீடியோ வெளியாகியுள்ளது.

நேற்று மாலை டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்த முதியவர் வெங்கடேசன், அப்பகுதியில் மது அருந்துபவர்களுக்கு உதவி செய்யும் ராஜ்குமார் என்பவரிடம் பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வர சொல்லியுள்ளார். தொடர்ந்து அந்த இளைஞருடன் முதியவரும் மற்றும் ஒருவரும் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜ்குமார் தனது பாக்கெட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டதாகக் கூறி அந்த முதியவர் பெல்டைக் கழற்றியும், காலால் எட்டி உதைத்தும் ராஜ்குமாரை சரமாரியாகத் தாக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்