வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மூதாட்டி வெட்டி கொலை...கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை

x

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஓரியூர் குடியிருப்பை சேர்ந்தவர் மூதாட்டி கோவிந்தம்மாள். இவர் தனது விவசாய நிலத்திற்கு இரவில் தண்ணீர் பாய்ச்ச சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி சென்றுள்ளனர். அங்கு, வயல் வெளியில் தலையில் வெட்டு காயங்களுடன் மூதாட்டி கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு கொலையாளிகளை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்