தரக்குறைவாக பேசிய அதிகாரிகள்? - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்..

ஊட்டியில் வியாபாரிகளை தரக்குறைவாக பேசிய அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி காவல் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

அங்குள்ள மார்க்கெட்டில், 6 கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், நகராட்சி அதிகாரி சண்முகம் என்பவர் வாடகை பாக்கியை வசூல் செய்ய சென்றுள்ளார்.

அப்போது, வியாபாரி சங்க செயலாளர் சரவணனை அவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com