கோயில் திருவிழாவில் கடும் கூட்ட நெரிசல் - கூட்டத்தில் நசுங்கி பெண் உயிரிழப்பு

x

ஒடிசாவில் கோயில் திருவிழாவில் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டாக் மாவட்டம் பரம்பாவில் உள்ள சிங்கநாத் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் கூடியதால், கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் படுகாயமனைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்