தற்காலிக முதல்வர் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை - ராமதாஸ் | PMK | Ramadoss

x

பத்துநாட்கள் ஆக்டிங் முதல்வராக இருப்பதற்கு கூட, வன்னியர் ஒருவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியர் சங்கத்தின் 44 ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை என்றார். தமிழகத்தில் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏராளமான கிராமங்களுக்கு தான் நடந்து சென்றுள்ளதாகவும், பல்வேறு சோதனைகள், வேதனைகளை கடந்து, முள் பாதையை, மலர் பாதையாக மாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்