வடகிழக்கு பருவமழை எதிரொலி - சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை

x

வடகிழக்கு பருவமழை எதிரொலியாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது.

மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சென்னையில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது. ஆனால், மாலை நேரம் நெருங்க கருமேகங்கள் சூழ்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, திருவெற்றியூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இரவு முழுவதும் நீடித்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்தனர். இந்நிலையில், இன்று காலை 8.30 மணி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்