'எந்த கொம்பனாக இருந்தாலும் அடக்குவோம்' - வடமாநிலத்தவர் விவகாரம்.. முதல்வர் ஆவேசம்

x
  • வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டால் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் பா. மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
  • இதில் முதலமைச்சர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பீகார் மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் தொலைபேசி வாயிலாக உரையாடியதாக தெரிவித்தார்.
  • மேலும், இந்த விவகாரத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க நினைத்தால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும் எனவும், இதன் மூலம் தங்கள் கூட்டணியை பிளவு படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்