இடி, மின்னலுடன் மிரட்டிய கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் | Nellai | Tn Rainfa

x

இடி, மின்னலுடன் மிரட்டிய கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, நெல்லை மாநகர் பகுதிகளான நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, பழைய பேட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்