இரவில் பக்கத்துக்கு வீட்டுக்கு பில்லி சூனியம்..? பெண் பிள்ளைகளுடன் பீதியில் தாய்.. மிரள வைக்கும் சூனியக்கார கிழவியின் செயல்

x

மூதாட்டி ஒருவர் பில்லி சூனியம் வைக்கும் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பில்லி சூனியம் வைக்கும் அளவிற்கு என்ன நடந்து விட்டது என்பதை பற்றி விளக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

நடு ஜாமத்தில்,பாட்டி ஒருவர் அமானுஷ்ய வேளைகளில் ஈடுபடும், இந்த சிசிடிவி காட்சிதான் தற்போது இணையத் தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது....

இது, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து தருமபுரி செல்லக்கூடிய ஒரு முக்கிய சாலையில் இருக்கும் பையர் நத்தம் கிராமத்தில் நடந்த காட்சி.

தருமபுரிக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்திருப் பதால் அப்பகுதியில் எப்பொழுதுமே ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்றபடி இருக்கும். ஆண்கள் கூட்டம் அலைமோதுவதை கண்டு அங்கு டாஸ்மாக்கும் துவங்கினார் கள்.

டாஸ்மாக் இருந்தாலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானத்தை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யும் சந்துக்கடைகள் ஏராளம். அந்தளவுக்கு மதுபிரியர்களின் சேட்டைகளும் தாராளமாக நடந்து வருகிறது.

அந்த பகுதியில் வசித்து வருபவர்தான் ராஜம்மாள்.... இவரும் தன் பங்குக்கு ஒரு சந்துக்கடை நடத்தி வந்திருக்கிறார். நேரம் காலம் இல்லாமல், அங்கு வந்து சென்ற மதுப்பிரியர்களால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர்.

பாட்டி ராஜம்மாள் வில்லங்கம் பிடித்தவர் என்பதால், அப்பகுதி மக்களும் இதனை கண்டும் காணாமல் இருந்து வநதனர்.

பாட்டியின் சந்துக்கடைக்கு அருகே, வசிப்பவர் ஜெயலட்சுமி. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மதுப்பிரியர்கள் அவ்வப்போது இவரது வீட்டுக் கதவை தட்டி, தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் மதுப்பிரியர்களின் அட்டகாசங்களை பொறுத்துக் கொள்ளமுடியாமல் ராஜம்மாளை தட்டி கேட்க தொடங்கினார் ஜெயலட்சுமி....

இதற்கு பாட்டி ராஜம்மாளின் தரப்பில், பயங்கரமான எதிர்வினையாற்றியுள்ளனர். பயந்து போன ஜெயலட்சுமி உடனடியாக காவல்நிலையம் சென்று புகார் தெரிவித்திருக் கிறார். ஆனாலும் போலீஸ் தரப்பில் சந்துக்கடை மீதோ, ராஜம்மாள் மீதோ எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

ஜெயலட்சுமி போலீசிடம் சென்றதால் ஆத்திரமடைந்த

பாட்டி ராஜம்மாள், அவரை பழிவாங்க திட்டமிட்டார். நேரடியாக மோதாமல் அவரை முடக்கிப்போட நினைத்த ராஜம்மாள் கையிலெடுத்த ஆயுதம்தான் செய்வினை.... இதற்காக யாரோ மாந்தீரிகரிடம் மந்திரித்த திருநீரை வாங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் ராஜம்மாள், அர்த்த ஜாமத்தில், ஜெயலட்சுமியின் வீட்டின் முன் நின்று "மந்திரித்த திருநீறு தூவி, ஒரு விதமான பில்லி சூன்யத்தை செய்துமுடித்துச் செல்வது போன்ற காட்சி, சிசிடிவி கேமராவில் பதிவாகி யுள்ளது...

சந்துக்கடை பாட்டியாக இருந்தவர், தற்போது பில்லிய சூனிய கிழவியாக அவதாரமெடுத்திருக்கிறார் என அஞ்சும் ஜெயலட்சுமி, இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அச்சத்துடன் வாழ்ந்து வருகிறேன்...அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்