நலம் விசாரிக்க சென்ற அமைச்சரை நெகிழ வைத்த நல்லகண்ணு - மக்களுக்காக வைத்த கோரிக்கை

x

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை வைத்தார்.

நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்பதால் அங்கு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நல்லக்கண்ணு அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்