பேக்கரியில் திடீரென புகுந்து அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் - சேலத்தில் பரபரப்பு

x

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, பேக்கரி கடையில் இருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 3 பேரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் கூத்தம்பட்டியை சேர்ந்த ரோகன், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் புதிதாக பேக்கரி கடை வைக்க பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்றிரவு ரோகனின் தாய்மாமனும், பெத்தநாயக்கன்பாளையம் துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான ஆறுமுகம், ஜனார்த்தனன், முத்துசாமி, லட்சுமணன், மௌலி ஆகியோர் கடையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட மர்மக் கும்பல், இவர்கள் மீது மிளகாய் பொடி தூவி சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. இதில் காயமடைந்த ஆறுமுகம் உள்ளிட்ட 3 பேரை போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மர்மக்கும்பல் தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்