"காணாமல் போன சுடுகாடு".. பாடை கட்டி வந்த மக்கள் புகார்

x

சுடுகாட்டை காணவில்லை என கூறி பாடை கட்டி, மேள-தாளத்துடன் வந்து கிராம சபை கூட்டத்தில் புகார் அளித்த விநோதம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

மல்லமூப்பம்பட்டியில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுடுகாடு மற்றும் கிணறுகள் காணாவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள், சுடுகாட்டை காணவில்லை என கூறி பாடை கட்டி வந்து மனு அளித்தனர்.

சுடுகாட்டில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை தீ வைத்து எரிப்பதால், உடல் உபாதை ஏற்படுவதாகவும் அவர்கள் முறையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்