வான் இலக்குகளை துல்லியமாக தாக்கிய ஏவுகணைகள்.. டிஆர்டிஓ, பாதுகாப்புத்துறைக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து

x

போர்க்காலங்களில் வான்வழித் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் டிஆர்டிஓ அண்மையில் ஏவுகணைகளை தயாரித்தது.

இந்த ஏவுகணைகளை ஒடிசா மாநிலம் சந்திப்பூர் பகுதியில் பரிசோதிக்கப்பட்டது.

வான் இலக்குகளை குறிவைத்து ஆறு விதமாக நடத்தப்பட்ட சோதனையில், ஏவுகணைகள் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்ததாக டிஆர்டிஓ தெரிவித்தது.

ஏவுகணை சோதனை வெற்றி பெற்ற நிலையில், டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதிய ஏவுகணைகள் இந்திய ராணுவத்திற்கு மேலும் வலுசேர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்