அமைச்சர் உதயநிதி பங்கேற்ற கண்காட்சி..நுழைவு வாயிலில் தள்ளுமுள்ளு - கதவு உடைந்த‌தால் பரபரப்பு

x

திருச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கண்காட்சியில், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, நுழைவு வாயில் கதவு உடைந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஜோசப் கல்லூரி மைதானத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்கிற தலைப்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பார்வையிட்டார். அப்போது, கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் நுழைவு வாயில் கதவு உடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்