அசுர வேகம்.. வாய்க்காலில் கவிழ்ந்த லாரி - ஓட்டுநர், கிளீனர் நிலை என்ன?

x

வாத்தலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


திருச்சி மாவட்டம், வாத்தலை அருகேயுள்ள கிளியநல்லூர் என்ற இடத்தில் சிமிண்ட் மூட்டைகளுடன் வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வாய்க்காலில் விழுந்தது.


இதில், அதிர்ஷடவசமாக லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் காயங்களுடன் உயிர் தப்பினர். இருவரும் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்