மெக்கா புனித பயணம் சென்று திரும்பிய நபர்... விமானத்திலேயே உயிரிழந்த சோகம்... சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

x

மெக்காவுக்கு புனித பயணம் சென்று விட்டு சென்னை திரும்பியவர், விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை திருவையாறு பகுதியை சேர்ந்த ராஜாமுகமது, புனித பயணமாக மெக்காவிற்கு சென்று விட்டு, பக்ரைனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பியுள்ளார். இந்தநிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை விமானநிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதும், ராஜாமுகமதுவை சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்