10 வயது சிறுவனின் உடலில் கடித்து பாலியல் தொல்லை கொடுத்த மனித மிருகம் - திண்டுக்கலில் அரங்கேறிய அதி பயங்கரம்

x

திண்டுக்கல் அருகே 10 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, உடலில் கடித்து வைத்த கட்டிட தொழிலாளியை போக்சோ வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர். வேடச்சந்தூர் அடுத்த பூத்தாம்பட்டி வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். கட்டிட தொழிலாளியான இவர், சம்பவத்தன்று அருகில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார். அப்போது, அப்பகுதியில் இருந்த 10 வயது சிறுவனை தனியாக அழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி உடலில் கடித்து வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுவன் அளித்த தகவலின் படி, சிறுவனின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இதனடிப்படையில், மனோஜ்குமாரை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்