மம்தா பானர்ஜியின் அதிரடி அறிவிப்பு - நாடாளுமன்ற தேர்தலுக்கு புது வியூகம்!

x

எங்கெல்லாம் காங்கிரஸ் வலுவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் நாங்கள் அவர்களை ஆதரிப்போம் என, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், கர்நாடகாவில் பாஜக ஆட்சியின் போது, ஜனநாயக உரிமைகள் புல்டோசர் மூலம் பறிக்கப்பட்டதால், அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்துள்ளதாக கூறினார். காங்கிரஸ் எங்கெல்லாம் வலுவாக இருக்கிறதோ, அங்கு அவர்களுக்கு ஆதரவளிப்போம் என்றும், ஆனால் மற்ற அரசியல் கட்சிகளையும் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என்றும் கூறினார். பீகார், ஒடிசா, தமிழ்நாடு, ஜார்கண்ட், தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வலுவான கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் மம்தா கூறினார். பாஜகவுக்கு எதிராகப் போராட வேண்டுமானால், காங்கிரஸ் போன்ற கட்சிகளும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்றும், மேற்கு வங்கத்தில் அவர்களுக்கு எதிராகப் போராடுவதை நிறுத்த வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்