திருப்பரங்குன்றம் கிரிவலம் செல்லும் பாதையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்.. பார்த்து அதிர்ந்து போன மக்கள்

x

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, நிலையூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர், குடித்துவிட்டு தென்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு போதையில் படுத்து உறங்கியுள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர்.

போதையில் இருந்த மணிகண்டன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்று சிறிது தூரம் நடந்து சென்றுள்ளார். அப்போது, சுயநினைவை இழந்து தென்பரங்குன்றம் சாலையில் உயிரிழந்தார்.

இந்த அவரது உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பக்தர்கள் கிரிவலம் வரும் பாதையில் இளைஞர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்