பிறந்த வீட்டில் ஆண் வாரிசு இல்லாததால் 16 வயது மகளை அப்பாவுக்கு இரையாக்கிய தாய்.. மதுரையை அதிரவிட்ட சம்பவம்

x
  • மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில் கடந்த 3 ஆம் தேதி தன் மகள் காணாமல் போனதாக அவரின் தாய் போலீசில் புகார் அளித்தார்.
  • 16 வயதான சிறுமி காணாமல் போனதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்..
  • அப்போது தான் சிறுமி மாயமானதன் பின்னணியில் இருந்த மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது.. சிறுமி உடன் 2 சகோதரர்கள் உள்ளனர்.
  • இதனிடையே சிறுமியின் தாய் வழி தாத்தாவுக்கு 4 மகள்கள். இருந்த ஒரு மகனும் சமீபத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்திருக்கிறார்..
  • 4 மகள்களில் ஒருவர் தான் புகார் அளித்த பெண். ஆண் வாரிசு இல்லாத தன் தந்தை குடும்பத்தின் நிலை அறிந்து வருந்தியிருக்கிறார் அந்த பெண்.
  • இதற்காக 16 வயதான தன் மகளை தன் தந்தைக்கு அதாவது சிறுமியின் தாத்தாவுக்கே திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கிறார் அந்த தாய்..
  • இதனால் பதறிப்போன சிறுமி, வேறு வழியின்றி தன் தாய் வழி சித்தியின் கணவரிடம் முறையிட்டு இருக்கிறார்.
  • அப்போது சிறுமிக்கும் அந்த சித்தப்பாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
  • இது ஒருபுறமிருக்க, தன் கொழுந்தனுடன் தன் தாய் தவறான உறவில் இருப்பதை பார்த்து பதறிப்போயிருக்கிறார் சிறுமி.
  • தன் தாய் குறித்து தாய் வழி சித்தப்பாவிடம் புலம்பியிருக்கிறார் சிறுமி...
  • இந்த விவகாரம் அறிந்த சிறுமியின் சித்தப்பா, மகள் உறவு முறை என்றும் கூட பாராமல் சிறுமியை தோப்பு வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரிடம் அத்துமீறி இருக்கிறார்.
  • இதனை பார்த்த சிறுமியின் தாய், தன் தங்கை கணவரை கண்டித்திருக்கிறார்...
  • பின்னர் சிறுமியின் தாய் தன் தங்கை கணவரிடம் சமரசமாக பேசி அவரிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை வாங்கியிருக்கிறார்.
  • பின்னர் நேராக தன் தந்தையிடம் சென்று தன் குடும்பத்திற்கு ஆண் வாரிசை பெற்றுத் தர இருப்பதாக கூறியிருக்கிறார்.
  • அதாவது தன் தங்கை கணவரும் தன் மகளும் நெருக்கமாக இருப்பதாகவும், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
  • அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் தங்கள் குடும்ப வாரிசாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் யோசனை சொல்லியிருக்கிறார்...
  • பின்னர் தன் மகளையும், தங்கை கணவரையும் வெளியூருக்கு அனுப்பி வைத்து திருமணம் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார் அவர்..
  • இந்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக தனது மகள் காணாமல் போய்விட்டதாக நாடகத்தையும் அரங்கேற்றி இருக்கிறார்.
  • ஊரை நம்ப வைக்கவே, தன் மகள் மாயமானதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
  • அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் தான் நடந்த இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது...
  • இதன்பேரில் சிறுமியின் தாய், சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்ற சித்தப்பா, சிறுமியின் தாத்தா என 3 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்... தன் குடும்பத்திற்கு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக மகளென்றும் பாராமல் 16 வயது சிறுமிக்கு தாயே நடத்திய இந்த கொடூர சம்பவம் பலரையும் பதற வைத்திருக்கிறது...

Next Story

மேலும் செய்திகள்