தோழிகளுடன் கோயிலுக்கு சென்ற ஐடி ஊழியர்.. திடீரென கத்தி வைத்து மிரட்டிய 3 பேர்..! நடுங்கி போன நண்பன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி

x
  • மதுரையில் தோழிகளுடன் கோவிலுக்கு சென்ற ஐடி ஊழியர்களிடம் கத்தியை காட்டி ஜிபே மூலம் பணம் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்...
  • நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழக்குயில்குடி மலைப்பகுதியில் உள்ள கோவிலுக்கு, ஐடி ஊழியர்கள் தனது பெண் தோழிகளுடன் சென்றுள்ளனர்.
  • அங்குள்ள சமணர்படுகை மற்றும் மலை மீதுள்ள சிற்பங்களை கண்டுகளித்த நிலையில், அங்கு வந்த மூன்று பேர் பெண் நண்பர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர்.
  • இதையடுத்து, இளைஞரிடம் இருந்து லேப்டாப், ஐபோனை பறித்த மூவரும், திருப்பித்தர வேண்டுமென்றால் ஜிபேயில் பணம் அனுப்பக்கோரி வற்புறுத்தியுள்ளனர்.
  • இதையடுத்து, இளைஞர்கள் ஜிபே மூலம் 10 ஆயிரம் ரூபாய் அனுப்பிய நிலையில், மூவரும் லேப்டாப் மற்றும் செல்போனை தராமல் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், மதுரையை சேர்ந்த விமல், பார்த்திபன் மற்றும் யோகேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்