காதல் திருமணம். வரதட்சணை கொடுமை.. கொளுத்திய கணவன் - கதறும் உறவினர்கள்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே, வரதட்சனை கேட்டு, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவரே தீ வைத்து கொளுத்திய சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த சங்கீதா - முத்துக்குமரன் தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளன. கடந்த 5ஆம் தேதி வழுதாவூரில் உள்ள தனது வீட்டில் இருந்து தீக்காயங்களுடன் சங்கீதா மீட்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது, தனக்குத்தானே தீவைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சங்கீதா வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த நிலையில், 20 நாட்களுக்குப் பிறகு சிகிச்சைப் பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். ஆனால், இறப்பதற்கு முன்பு அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்தியதாகவும், தனது கணவர்தான் தீவைத்து கொளுத்தியதாகவும், வெளியில் சொன்னால் பிள்ளைகளையும் கொளுத்திவிடுவேன் என மிரட்டியதால், பயத்தில் வெளியில் சொல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்